சீனாவின் சினோபெக்கின் முதலாவது எரிபொருள் ஏற்றுமதி அடுத்த மாத முற்பகுதியில் நாட்டிற்கு வரும் என்றும், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு பதிலாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் அதிகபட்ச சில்லறை விலைக்கு (MRP) மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.
இன்று (23) ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற ‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.