இந்த நேரத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க பாலம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் மக்களுக்கு மூன்று வேளை உணவளிக்கும் வழியைக் கண்டுபிடிப்பதே சிறந்தது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை மற்றும் இந்தியாவை இணைக்கும் பாலம் அமைப்பது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும், நாடு இன்னும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்தாலும், அவர்களுக்கும் சில உள் அரசியல் பிரச்னைகள் உள்ளன. நாட்டில் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் உள்ளன.
எனவே, தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்ட அபிவிருத்தியடைந்த நாடுகளிலிருந்து பொருட்களை ஏற்றுக்கொள்வது பொருத்தமானதல்ல என பீல்ட் மார்ஷல் தெரிவித்துள்ளார். (சதுரங்க பிரதீப் சமரவிக்ரம)